இலங்கை பிரதமருடன் பாகிஸ்தான் கடற்படை தளபதி சந்திப்பு

பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் சபர் மஹமூத், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

Update: 2020-01-29 12:08 GMT
பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் சபர் மஹமூத், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அலரிமாளிகையில் வைத்து நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அவர் நினைவு சின்னமொன்று வழங்கினார். பின்னர் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவ், இலங்கையின் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் ஆகியோரை சபர் மஹமூத் சந்தித்தார். 


Tags:    

மேலும் செய்திகள்