ரஷ்யா தலைமையிலான படைகள் தாக்குதல் : வடமேற்கு சிரியாவில் 18 பேர் பலி
வடமேற்கு சிரியாவில் பிரிவினைவாதிகள் மீது ரஷ்யா மற்றும் அரசுப் படைகள் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 18 பேர் பலியாகி உள்ளனர்.
வடமேற்கு சிரியாவில் பிரிவினைவாதிகள் மீது ரஷ்யா மற்றும் அரசுப் படைகள் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 18 பேர் பலியாகி உள்ளனர். இந்த தொடர் தாக்குதலால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் துருக்கி எல்லையில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை சிரியா மற்றும் ரஷ்ய நாடுகள் மறுத்துள்ளன.