பாக்தாத் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் - உயிரிழப்பு இல்லை என ஈராக் அதிகாரிகள் தகவல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் உள்பட பன்னா​ட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது

Update: 2020-01-21 05:47 GMT
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் உள்பட பன்னா​ட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. Katyusha ரக  ஏவுகணைகள் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட நிலையில், உயிரிழப்பு ஏதும் இல்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பாக்தாத் அருகில் உள்ள Zafaraniyah மாவட்டத்தில் இருந்து ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்