"நாங்கள் செய்தது எல்லாம், பதில் நடவடிக்கையே" - இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகெனி தகவல்

ஈரான் ஒருபோதும் போரை விரும்பவில்லை என இந்தியாவுக்கான ஈரான் தூதர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-08 13:18 GMT
ஈரான் ஒருபோதும் போரை விரும்பவில்லை என இந்தியாவுக்கான ஈரான் தூதர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த பிராந்தியத்தில் இந்தியா உள்ளிட்ட சகோதர நாடுகளுடன் அமைதி உறவையே, விரும்புவதாக தெரிவித்த அவர், பதற்றம்  ஏற்படுவதை விரும்பவில்லை என்றார். இந்த பிராந்தியத்தில், இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்ற அவர், இந்தியாவின் எந்த முயற்சியையும் நாங்கள் வரவேற்கிறோம் என்றும், நாங்கள் செய்ததெல்லாம், பதில் நடவடிக்கைதான் என்றும் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்