இலங்கை அதிபர் தேர்தல் "கோத்தபய ராஜபக்சே வுக்கு வெற்றி வாய்ப்பு''

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Update: 2019-11-14 12:29 GMT
இலங்கை அதிபர் தேர்தல் வருகிற 16 ஆம் தேதி நடைபெற உள்ளது ..இந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கும் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையை கடும் போட்டி நிலவுகிறது.  இருப்பினும்  முன்னாள் பாதுகாப்பு செயலாளரும்,  ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் குறிப்பிட்டுள்ளது.  இலங்கையில் மீண்டும் ராஜபக்சே குடும்பத்தினர் ஆதிக்கம் அதிகரிக்கும் என்றும் அந்த கணிப்பு தெரிவிக்கின்றது. இதேபோன்று மேலும் சில செய்தி நிறுவனங்களும் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை கோத்தபய ராஜபக்சே வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிவித்துள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்