"வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை" - அதிகாரிகளுக்கு இலங்கை அதிபர் அறிவுறுத்தல்

இலங்கை அரசியல் நிலையை கவனத்தில் கொள்ளாமல், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-11-03 23:07 GMT
இலங்கை அரசியல் நிலையை கவனத்தில் கொள்ளாமல்,  நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.   வளர்ச்சி  வேலை திட்டங்களின் மேம்பாடு மற்றும் எதிர்கால மேம்பாட்டுத் திட்டம் பற்றி அனைத்துத் துறை அதிகாரிகளுடன் பொலன்னறுவையில் நடந்த கூட்டத்தில் அதிபர் சிறிசேன ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகள் தமக்குரிய பணிகளை வரும் டிசம்பர் 31  ஆம் தேதிக்கு முன்னர் நிறைவு செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். வனப்பகுதியை அதிகரிக்க, அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில்,  2019 ஆம் ஆண்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வருடமாக பிரகடனப்படுத்த உள்ளதாகவும் சிறிசேன தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்