இலங்கை அதிபர் சிறிசேன- பிரதமர் ராஜபக்சே கூட்டணி - ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே உறுதி

இலங்கையில், பிரதமர் ராஜபக்சே தலைமையிலான புதிய அரசு, விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் மறுவாழ்வை உறுதிபடுத்தும் என ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-02 06:24 GMT
தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நமல் ராஜபக்சே, தனது தந்தை ராஜபக்சே இலங்கை அதிபராக இருந்தபோது, 12 ஆயிரம் முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பினருக்கு மறுவாழ்வு அளித்ததாகவும், மூன்றாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது பிரதமராக பொறுப்பேற்றுள்ள ராஜபக்சே, அதிபர் சிறிசேனவுடன் இணைந்து, மீதமுள்ள விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு  புனர்வாழ்வளித்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்