அதிர்ச்சி கொடுத்த விஏஓ மரண வாக்குமூலம்... சிக்கும் முக்கிய புள்ளிகள்

Update: 2024-04-25 08:27 GMT

கிராம உதவியாளர் அவமானப்படுத்தியதாக கூறி மரண வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு வி.ஏ.ஓ தற்கொலை செய்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கனக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த கருப்புசாமி, கடந்த 23-ம் தேதி பொள்ளாச்சியில் தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கருப்புசாமி இறப்பதற்கு முன் மரண வாக்குமூலம் எழுதியது தெரியவந்துள்ளது. அதில், கிராம உதவியாளர் சித்ரா, மக்கள் மித்திரன் என்ற பத்திரிகையின் ஆசிரியர் மணியன் ஆகியோர் தன்னை அவமானப்படுத்தியதோடு, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். அவரது வாக்குமூல கடிதத்தை உடுமலை கோட்டாட்சியரிடம் ஒப்படைத்த கருப்புசாமியின் உறவினர்கள், குற்றம்சாட்டப்பட்ட இருவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்