தீவிர சோதனையில் போலீசார்.. காரில் வந்த போதை பொருட்கள்.. சிக்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்

Update: 2024-04-27 04:34 GMT

தென்காசி மாவட்டம் சிவகிரியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராஜபாளையம் வழியாக வந்த கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட போலீசார், காருக்குள் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், புகையிலை பொருட்களை கடத்தியது தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவி தமிழ்செல்வியின் கணவர் சுபாஷ் சந்திர போஸ் என்பது தெரியவந்தது. கார் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ஊராட்சிமன்ற தலைவியின் கணவருடன் சேர்ந்து கார் ஓட்டுநரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்