"தர வேண்டும் தர வேண்டும்".. கையில் மண்சட்டியோடு அமர்த்த மக்கள்.. சிபிசிஎல் ஆலையை சுற்றி போராட்டம்

Update: 2024-05-08 05:32 GMT

நாகை அருகே, சிபிசிஎல் எண்ணைய் ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், கூடுதல் நிவாரணம் கேட்டு மற்றொரு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் பனங்குடியில் அமைந்துள்ள சிபிசிஎல் எண்ணை ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கியவர்கள் கூடுதல் நிவாரணம் கேட்டு பிள்ளை பனங்குடியில் தொடர்ந்து 7-வது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு போட்டியாக இன்று நாகை மாவட்டம் பனங்குடி சிபிசிஎல் எண்ணை ஆலை முன்பு, ஆலையை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்