இரு பிரிவாக பிரிந்த மாணவர்கள்..2 துண்டாகி போன பள்ளி வளாகம்..மாணவர்கள் செய்யவே கூடாத விஷயம்-Cuddalore

Update: 2023-11-08 15:36 GMT

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் சாதியின் பெயரில் அடிக்கடி மோதி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள், பண்ருட்டி அருகேயுள்ள நத்தம் கிராமத்தில் வைத்து இரு பிரிவுகளாக பிரிந்து மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், 4 மானவர்கள் படுகாயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 5 பள்ளி மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்