வீட்டிற்குள் புதை குழி வெட்டி - தாய் சடலத்தோடு 6 நாட்கள் - வாழ்ந்த மகன் தூத்துக்குடியில் அதிர்ச்சி

Update: 2024-05-09 05:51 GMT

அய்யனடைப்பு சிவசக்திநகரில் உள்ள ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சிப்காட் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், சம்பவ இடத்திற்கு சென்று முகமது குலாமிடம் விசாரணை நடத்தினர். கடந்த 2ஆம் தேதி தனது தாய் ஆஷா பைரோஸ் இறந்துவிட்டதாகவும், உறவினர்கள் யாரும் இல்லாததால் நானே தாயின் உடலை வீட்டிற்குள் குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, புதைக்கப்பட்ட ஆஷா பைரோஸ் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது இயற்கை மரணம் எய்தினாரா? என்பது தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்