கூட்டு பாலியல் வன்கொடுமை - `வீடியோ எடுத்து மிரட்டல்' - பாய்ந்த போக்சோ

Update: 2024-05-09 05:43 GMT

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே இளம்பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் 3 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த பெண், கடந்த ஆண்டு மைனர் பெண்ணாக இருந்தபோது, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக அந்த பகுதியைச் சேர்ந்த சந்துரு மற்றும் அவருடைய நண்பர்கள் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய சந்துரு அவருடைய நண்பர் தனுஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 17 வயது சிறுவனையும் அவர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்