"அவுட்டா இல்லையா..?" - 23 வயது இளைஞரை கொன்ற 15 வயது சிறுவன்

Update: 2024-05-09 05:50 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் பலியானார்.

ஆலங்குடி புது காலணி பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்ற 23 வயது இளைஞர், தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவுட்டா? இல்லையா? என்பது தொடர்பான பிரச்சனை எழுந்துள்ளது. இதில், அஜித்குமாரின் தலையில், 15 வயது சிறுவன் ஒருவன் ஸ்டெம்பை கொண்டு பலமாக அடித்துள்ளார். இதனால் சரிந்து விழுந்த அஜித்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்