தஞ்சாவூரில் பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இந்து எழுச்சி பேரவை நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக உள்ள சாய்ரகு என்பவர், தஞ்சை - நாகை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது, பட்டாக் கத்தி மூலம் கேக் வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாய்ரகுவை கைது செய்தனர்.