"உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யலாமா".. நகைக்கடையில் கைவரிசை காட்டிய ஊழியர்

Update: 2024-04-27 04:38 GMT

சென்னை, யானைகவுனியில் நகைக்கடை நடத்தி வருபவர் பிரதாப். இவரது கடையில் திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த ஆனந்த் என்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கலெக்‌ஷன் பிரிவில் பணிபுரிந்து வந்திருக்கிறார். கடந்த 24 ஆம் தேதி.. ஆந்திராவில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து 232 கிராம் எடையுள்ள தங்ககட்டியை வாங்கி வருமாறு ஆனந்தை கடை உரிமையாளர் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதில், தங்க கட்டிகளுடன் ஆந்திராவில் இருந்து புறப்பட்ட ஆனந்த், திடீரென மாயமானதாகவும்... செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதால் அவர் தலைமறைவானதாகவும் கூறி நகைக்கடை உரிமையாளர் பிரதாப் போலீசில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் வழக்குபதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவானதாக கூறப்படும் நகைக்கடை ஊழியர் ஆனந்த்தை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்