அதிக காளைகளை அடக்கி சாதனை.. பரிசாக பைக் பெற்ற 2,3ஆம் இடம் பிடித்த வீரர்கள்

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், 19 காளைகளை அடக்கிய ராம்குமார் இரண்டாம் பரிசையும், 13 காளைகளை அடக்கிய கோபாலகிருஷ்ணனுக்கு மூன்றாம் பரிசையும் வென்றார்.

Update: 2022-01-17 13:33 GMT
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் மொத்தம் 1,020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 

இந்த போட்டியில், 21 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்திக் என்ற இளைஞர் முதல்பரிசை வென்றார். அதேபோல், 19 காளைகளை அடக்கிய ராம்குமார் இரண்டாம் பரிசை வென்றார். அவருக்கு இருசக்கர வாகனம் மற்றும் பரிசுக் கேடயம் வழங்கி கவுரவிப்பட்டது. 

13 காளைகளை அடக்கிய கோபாலகிருஷ்ணனுக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது. அவர் பரிசு மற்றும் கேடயம் வழங்கி கவுரவிப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்