அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம்?

முழு ஊரடங்கு காரணமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதியை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

Update: 2022-01-11 07:20 GMT
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம்?

மதுரையில் ஜனவரி 14,15,16 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
 
அலங்காநல்லூர் போட்டி நடைபெறும் ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்று முழு ஊரடங்கு நடைமுறையை அரசு அறிவித்துள்ளது.
எனவே, அன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டதற்கு, முழு ஊரடங்கு நாளன்று  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அரசு விலக்கு அளித்தால் போட்டிகள் நடைபெறும் எனவும், இல்லையெனில் மறுநாள் திங்கள் கிழமை (ஜன.17) அன்று போட்டிகள் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அலங்காநல்லூர் போட்டி நடத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அரசின் வழிகாட்டு நெறிமுறை உத்தரவு இன்று மதியத்திற்குள் வெளியாகும் என்றும் தகவல் அளித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்