மதுபோதையில் அதிமுக முன்னாள் எம்பி ரகளை : அடுத்தவரின் வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் - வழக்கு பதிவு செய்து விசாரணை

குன்னூரில் அதிமுக முன்னாள் எம்பி மது போதையில் அடுத்தவரின் வீட்டிற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

Update: 2021-11-05 18:37 GMT
குன்னூரில் அதிமுக முன்னாள் எம்பி மது போதையில் அடுத்தவரின் வீட்டிற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் நீலகிரி தொகுதி மக்களவை எம்.பியாக  இருந்த கோபால கிருஷ்ணன், நகராட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் மது போதையில் இருந்த கோபாலகிருஷ்ணன், முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தனது ஆடைகளை முழுவதுமாக கழற்றியதை தொடர்ந்து அந்த வீட்டின் உரிமையாளர் கோபால கிருஷ்ணனை தாக்கியுள்ளார். பின்னர் கோபால கிருஷ்ணன் நிர்வாணமாக நிற்பதை வீடியோவும் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் தன்னை தாக்கியதாக கூறி வீட்டின் உரிமையாளர் குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இது குறித்து  விசாரணை நடத்திய போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்