ஏரியில் மீன்பிடிக்க சென்றவர் பலி - காலில் வலை சிக்கி உயிரிழந்த சோகம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் மீன்பிடிக்க சென்றவர் காலில் வலை சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் மீன்பிடிக்க சென்றவர் காலில் வலை சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் தன் மனைவியின் வீடு உள்ள பால்நெல்லூர் பகுதியில் தங்கி இருந்தார். இதனிடையே பூதனூர் ஏரியில் மீன்பிடிக்க சென்ற அவர், திடீரென வலை காலில் சிக்கியதால் ஏரியில் இறந்து கிடந்தார். இவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.