பற்றியெரிந்த கட்டடம்... தனி ஒருவனாய் 50 உயிர்களை காத்த சிறுவன்... நேரில் அழைத்து கவுரவித்த முதல்வர்

Update: 2024-04-30 11:02 GMT

தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட நபர்களை விபத்தில் இருந்து காப்பாற்றிய சிறுவனுக்கு தெலங்கானா முதல்வர் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். ஐதராபாத்தில் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணிபுரிந்த நபர்கள் வெளியேற முடியாமல் 3வது தளத்தில் சிக்கித் தவித்தனர்... இதைக் கவனித்த சிறுவன் சாய் சரண், மேலிருந்து கயிற்றைக் கட்டி கீழிறங்கும் வகையில் ஏற்பாடு செய்தார்... இதனால் 50க்கும் மேற்பட்டோர் கயிறு மூலம் இறங்கி உயிர் பிழைத்தனர். 50க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றிய சாய் சரணை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்