லாரிகளுக்கு 1½ லட்சம் அபராதம்.. காரைக்காலில் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி

Update: 2024-04-30 11:17 GMT

காரைக்காலில் நிலக்கரி துகள்கள் சிதறியதால் ஏற்பட்ட விபத்துகள் எதிரொலியால் அந்த மாவட்டத்தில், 21 லாரிகள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதிள்ளனர். தனியார் துறைமுகத்தில் இருந்து, நிலக்கரி கொண்டு செல்லும் லாரிகள் முழுமையாக மூடப்படாமல் உள்ளதால் அதிலிருந்து சாலையில் சிதறிய நிலக்கரியால் கடந்த ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட இருசக்கர விபத்துக்கள் ஏற்பட்டது. அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிக லோடு நிலக்கரி ஏற்றி வந்த, போதிய ஆவணங்கள் இல்லாத லாரிகளுக்கு ஒன்றரை லட்சம் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்