டெல்லி காங். தலைவர் அரவிந்தர் சிங் திடீர் விலகல்

Update: 2024-04-30 11:19 GMT

டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவி விலகியதை அடுத்து, தேவேந்திர யாதவ் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் மேலிடத்தில் உள்ளோர் தங்களின் கருத்துக்களை கேட்கவில்லை எனவும் கூறி அரவிந்தர் சிங் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், டெல்லி கங்கிரஸ் கமிட்டியின் இடைக்கால தலைவராக பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான தேவேந்திர யாதவ், பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும் தனது பதவியை தொடர்வார் எனவும் காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்