தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கொடநாடு வழக்கு.. சிபிசிஐடி எடுத்த அதிரடி மூவ்

Update: 2024-04-30 11:15 GMT

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கொடநாடு எஸ்டேட்டில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ரமேஷ், காய்கறி சப்ளை செய்து வந்த தேவன், இந்த வழக்கின் முக்கிய நபரான சயானின் கோவை வீட்டில் வசித்த வீட்டின் வசித்து வந்த ரவிக்குமார் மற்றும் நம்பர் பிளேட் செய்து கொடுக்கும் அப்துல் காதர் ஆகிய 4 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதனைத் தொடர்ந்து, 4 பேரும் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சிபிசிஐடி துணை ஆணையர் முருகவேல் விசாரணை மேற்கொண்டார். இதுவரை இந்த வழக்குகளில் தொடர்புடையவர்கள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரே நேரத்தில் 4 பேரையும் அழைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்