Postal Department | பாராட்டுக்கு மேல் பாராட்டு பெற்ற தூய்மை பணியாளர்.... பெருமைப்படுத்திய அஞ்சல்துறை

Update: 2026-01-30 02:27 GMT

45 பவுன் நகை மீட்பு - தூய்மை பணியாளர் பத்மாவை கவுரவித்த அஞ்சல்துறை

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த துாய்மைப் பணியாளரான பத்மா, தி.நகர் பகுதியில் கடந்த 11-ம் சாலையில் கண்டெடுத்த 45 சவரன் நகைகளை போலீசில் ஒப்படைத்த நிலையில் அவரின் நேர்மையை பாராட்டி, அஞ்சல்துறை அவரது புகைப்படத்துடன் கூடிய சிறப்பு தபால் தலை வெளியிட்டு கவுரவித்துள்ளது. அஞ்சலக வங்கியில் அவருக்கு பிரீமியம் கணக்கு தொடங்கப்பட்டு, 15 லட்சத்திற்கான விபத்து காப்பீட்டு ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முன் முதல்வர் இவருக்கு 1 லட்சம் ரூபாய் வெகுமதி அளித்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்