வருவாய் ஆய்வாளர் சடலமாக மீட்பு - காரணம் குறித்து போலீசார் விசாரணை

சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் சரவணன் ராசிபுரம் தேசியநெடுஞ்சாலை மேம்பாலம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்பகப்பட்டார்.

Update: 2021-09-22 10:39 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் சரவணண். இவர் வருவாய் ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார். இவர் 3 அதிகாரிகளுடன் நேற்றிரவு கமுதியிலிருந்து சேலம் வழியாக சென்னை வரும் வகையில் ரயிலில் புறப்பட்டுள்ளார். ஆனால் வழியிலேயே ராசிபுரம் தேசியநெடுஞ்சாலை மேம்பாலம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் காயங்களுடன் சடலமாக இருந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வெண்ணந்தூர் காவல்துறை மற்றும் ரயில்வே காவல்துறையினர் சரவணன் உடலை கைப்பற்றினர். மேலும், அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்