அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை
ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கருணாநிதி 2-வது மகள் கனிமொழி கடந்த 12ஆம் தேதி நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்தவர் தேர்வு எழுதிய தினம் முதல் மாணவி சோர்வாக இருந்துள்ளார். நேற்று இரவு துளாரங்குறிச்சி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.