கொலை வழக்கு - குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில், கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-05 03:32 GMT
திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில், கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சோழவரத்தைச் சேர்ந்த கணேஷ், வெங்கடேசன், பிரித்விராஜ், மணிகண்டன், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்