கொரோனா தடுப்பு நடவடிக்கை - திரையுலகினர் நிதியுதவி | COVID19

தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரையுலகினர் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

Update: 2021-05-16 00:16 GMT
தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரையுலகினர் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.  சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நடிகர் ஜெயம் ரவியும், அவரது தந்தையும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினார். இயக்குனர் வெற்றிமாறன் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜெயம் ரவி, கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்