சென்னையில் கொரோனா பரவல் தீவிரம் - 15 மண்டலம் வாரியாக குழுக்கள் அமைப்பு

சென்னையில் புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, 15 மண்டலம் வாரியாக குழுக்கள் அமைத்து கண்காணிக்கும்படி மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-05-07 09:49 GMT
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 6 ஆம் தேதி முதல் கூடுதலாக புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் புதிய கட்டுப்பாடுகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் குழுக்கள் அமைத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். ஒரு குழுவிற்கு ஐந்து நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் ஒவ்வொரு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு, அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்