"சமூக இடைவெளியை மீறினால் ரூ.500 அபராதம்" - தலைமை செயலக ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிபவர்கள், முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-22 08:07 GMT
சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிபவர்கள், முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதையொட்டி, தலைமை செயலக ஊழியர்கள், முகக்கசவம் அணியாமல் வந்தால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என முதன்மை செயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்