பாட்டி, பேத்தி கொலையான சம்பவத்தில் அதிரடி - தாய், மகன், மகள் என 4 பேர் கைது

தென்காசியில் வட்டிக்கு மேல் அதிக வட்டி கேட்டதாக கூறி பாட்டி மற்றும் அவரது பேத்தியை கொடூரமாக கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-20 21:21 GMT
தென்காசியில் வட்டிக்கு மேல் அதிக வட்டி கேட்டதாக கூறி பாட்டி மற்றும் அவரது பேத்தியை கொடூரமாக கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி கீழப்புலியூரில் கடந்த மாதம் 12ஆம் தேதி கோமதி அம்மாள் என்ற மூதாட்டியும், அவரது ஒன்றரை வயது பேத்தி உத்ராவும் மாயமாகினர். இதுதொடர்பாக போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் விசாரணை நடந்தது. இதனிடையே முத்துமாலைபுரம் பகுதியில் சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் 2 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. விசாரித்த போது 
வேட்டைக்காரன் குளத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி வீரபாண்டி அம்மாள் என்பவருக்கு கோமதி அம்மாள்  20,000 ரூபாய் கடன் கொடுத்துள்ளார். ஆனால் இந்த பணத்திற்கு அதிக வட்டி வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கோமதி அம்மாளையும் அவரின் பேத்தியையும் கொன்று சாக்குமூட்டையில் கட்டி வீசியதும் உறுதியானது. இதையடுத்து கொலையாளிகளான 4 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்