பிரசவ வார்டில் மின்தடை - கைக்குழந்தைகளுடன் பெண்கள் அவதி

தொடர்மழை காரணமாக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது,.

Update: 2020-11-07 03:44 GMT
தொடர்மழை காரணமாக  ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது,. நாள் முழுவதும் மின்தடை சரி செய்யப்படாததால் பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு தாய்மார்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர்,. இதனால் ஆத்திரம் அடைந்த தாய்மார்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்,. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை துணை  கண்காணிப்பாளர் வெள்ளைதுரை பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள்  கலைந்து சென்றனர் 
Tags:    

மேலும் செய்திகள்