நகராட்சி பணியில் ஈடுபடுத்தப்பட்ட 4 பள்ளி மாணவர்கள் - ஒப்பந்ததாரர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு படையினர் வழக்குப்பதிவு
விருதுநகரில் நகராட்சி சார்பாக மாவட்ட மைய நூலகம் அருகே பாதாள சாக்கடை பரிமரிப்பு நடைபெற்று வருகிறது.
விருதுநகரில் நகராட்சி சார்பாக மாவட்ட மைய நூலகம் அருகே பாதாள சாக்கடை பரிமரிப்பு நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கான ஒப்பந்ததை பெரிய வள்ளிகுளத்தை சேர்ந்த வனராஜன் என்பவர் பெற்று வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் பள்ளி மாணவர்களை ஒப்பந்ததாரர் ஈடுபடுத்துவதாக குழந்தை தொழிலாளர் தடுப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பாதாள சாக்கடை கட்டுமான பணிக்கு ஒப்பந்ததாரர் எட்டாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 4 பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. குழந்தைகளை மீட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு படையினர்,
ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.