பச்சையப்பன் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்தவேண்டும் - பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
பச்சையப்பன் அறக்கட்டளை கீழ் இயங்கி வரும் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பச்சையப்பன் அறக்கட்டளை கீழ் இயங்கி வரும் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பசுபதி, பல ஆண்டுகளாக பணி புரிந்த கல்லூரி பேராசிரியர்கள் 105 பேரை அறக்கட்டளை தலைவர் பணி நீக்கம் செய்திருக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.