4 வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதில் முறைகேடு - வட்டாச்சியரின் புகாரில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி கைது

மதுரை நான்கு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதில் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையில் முறைகேடு செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-10-02 11:58 GMT
நான்கு வழி சாலைக்காக நிலம் கையகப்படடுத்தப்பட்டதுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி நில உரிமையாளர்கள் வட்டாச்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வட்டாச்சியர் பிராபகரன் விசாரித்ததில் அலுவலக உதவியாளர் சாந்தி நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையில் இருந்து 58 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை முறைகேடாக பரிமாற்றம் செய்தது தெரிய வந்தது. வட்டாச்சியர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அலுவலக உதவியாளர் சாந்தி மற்றும் அவரது சகோதரர் சங்கர் குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    

Tags:    

மேலும் செய்திகள்