நீதிமன்ற உத்தரவை தாழ்மையுடன் ஏற்கிறேன் - சூர்யா

நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2020-09-19 04:47 GMT
நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவை தாழ்மையுடன் ஏற்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்திய நீதித்துறை மீது தான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும் மக்களின் உரிமைகளை நீதித்துறைதான் உறுதி செய்வதாகவும் கூறியுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்