சுதந்திர தின கொண்டாட்டம் - அரசு அறிவுறுத்தல்

சுதந்திர தின விழாவில் மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Update: 2020-08-13 05:16 GMT
74-வது சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமை செயலகத்தில் உள்ள, கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் பழனிசாமி காலை 8.45 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விழாவில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று உரிய மரியாதை வழங்க ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கே நேரில் சென்று, இனிப்பு பெட்டகம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்,கொரோனா முன்களப் பணியாளர்களை சிறப்பிக்கும் விதமாக, அவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்குவார் என்றும் அரசு அறிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்