பணியிலிருக்கும் போதே ஒரு பெக் போட்டு வேலை செய்த அரசு ஊழியர் - தீயாய் பரவிய காட்சிகள்

Update: 2024-04-30 07:34 GMT

திருச்சி புத்தூர் அருகே பணியின் போது மது அருந்திக் கொண்டிருந்த கூட்டுறவு விற்பனை அங்காடி விற்பனையாளர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சிந்தாமணி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலையின் விற்பனையாளராக நசுருதீன் பணியாற்றி வந்துள்ளார். இவர் பணி நேரத்தில் மது போதையில் இருந்ததாகவும், அநாகரிகமாக பேசியதாவும் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரை அடுத்து நசுருதீனை தற்காலிக பணி நீக்கம் செய்து, கூட்டுறவு மொத்த பண்டகசாலையின் துணைபதிவாளர் ராஜ்குமார் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்