5 மாத கருவோடு கர்ப்பிணியை அழித்த போதை மிருகம்.. ஈரோட்டில் படுபயங்கரம்

Update: 2024-04-30 07:32 GMT

ஈரோடு அருகே, மதுபோதையில் கணவன் தாக்கியதில், கர்ப்பிணி மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற மண்டேசாமிக்கு, ஆஷா என்ற மனைவியும், 3 வயது மகளும் உள்ளார். தற்போது ஆஷா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், மதுபோதைக்கு அடிமையான ரமேஷ், அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல், மீண்டும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்ட ரமேஷ், மனைவியை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த ஆஷா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உறவினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்