சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவம் - வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகளை இன்று வழங்குகிறார் முதலமைச்சர்

ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் இன்று வழங்குகிறார்.

Update: 2020-07-27 03:00 GMT
சாத்தான்குளத்தில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா
10 லட்சம் ரூபாயை தமிழக அரசு அறிவித்தது. மேலும், அவர்களது வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்தநிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வாரிசுகளுக்கு அரசு வேலை ஒதுக்கீட்டிற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார்
Tags:    

மேலும் செய்திகள்