நரேந்திர மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா? - நடிகர் ரஜினிகாந்துக்கு காங்கிரஸ் எம்.பி. கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா? என நடிகர் ரஜினி காந்துக்கு, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-07-23 09:58 GMT
பிரதமர் நரேந்திர மோடி அரசின் துரோகத்தை  ஆதரிக்கிறீர்களா? என நடிகர் ரஜினி காந்துக்கு, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள ஜோதிமணி,  தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 70 சதவீதம் என்றும், இது தேசிய  அளவில் 52 சதவீதம் என சுட்டிக்காட்டி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இடஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பதன் மூலம்,  லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவில் மண் அள்ளிப் போட்டிருக்கிறது பா.ஜ.க. அரசு என்றும் அதில் தெரிவித்துள்ளார். அவ்வப்போது கருத்துச் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ள தங்களுக்கு, இது பற்றி கருத்தே இல்லையா?அல்லது மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா? என்று பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்