ஐடி நிறுவனங்களுக்கு தளர்வுகள் - 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி

சென்னை மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-07-10 17:27 GMT
சென்னை மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 50 சதவீத பணியாளர்களில் 90% பேர், நிர்வாகம் ஏற்பாடு செய்யும் வாகனங்களிலேயே வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  வரும்13 ஆம் தேதி முதல் தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என்றும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு தளர்வுகள் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முடிந்தவரை வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்