மனைவியை பார்க்க அனுமதிக்காததால் ஆத்திரம் - விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் தற்கொலை முயற்சி

ஒசூர் அருகே விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர் காவல் நிலையத்திலேயே, கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-07-10 02:14 GMT
அரசு மதுபானக்கடையில் பாட்டில்கள் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த, ஒசூர் அருகேயுள்ள அஞ்செட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீராமன் என்பவரை, போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது ஸ்ரீராமனை பார்க்க அவரது மனைவி சரளா  காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அதற்கு போலீசார் அனுமதிக்காததால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீராமன், அங்கு காகிதம் அறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை போலீஸார் மீட்டு தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு 7 தையல்கள் போடப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீராமனை, போலீஸார் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்