முழு ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட விசைத்தறி கூடங்கள் - தலா ரூ.1000 அபராதம் விதித்த நகராட்சி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இயக்கி வந்த விசைத்தறி கூடங்களின் சாவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2020-07-07 02:31 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்
முழு ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இயக்கி வந்த விசைத்தறி கூடங்களின் சாவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  இந்நிலையில், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட விசைத்தறி உரிமையாளர்கள், தங்கள் சாவிகளை திருப்ப தரக்கோரி வலியுறுத்தினர். அவர்களிடம் ஆயிரம் ரூபாய் தொகையை அபராதமாக வசூலித்த பிறகு  சாவிகளை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அடுத்த முறை இது போல் செயல்பட்டால் விசைத்தறி கூடங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்