சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 போலீசாருக்கும் நீதிமன்ற காவல்

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Update: 2020-07-02 17:08 GMT
ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,  உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முழு உடல் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின்பு, தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு அவர்களை ஆஜர்படுத்தினர்.இதனையடுத்து நீதிபதியின் உத்தரவின் பேரில் 3 காவலர்களும்  பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்