சாத்தான்குளம் சம்பவம் - மூத்த வழக்கறிஞர்கள் அமைப்பு கண்டனம்

சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என தமிழ்நாடு மூத்த வழக்கறிஞர்கள் அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2020-06-28 02:24 GMT
சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தண்டிக்க வேண்டும் என தமிழ்நாடு மூத்த வழக்கறிஞர்கள் அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் போலீஸ் காவலில் இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளளாக்கி உள்ளதாவும், இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய மாஜிஸ்திரேட், உடல் தகுதி சான்றிதழ் அளித்த மருத்துவர் மற்றும் ஜெயிலர் ஆகியோர் தங்களது கடமையை செய்ய தவறி விட்டதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசு நிர்வாகத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்