வரைவு மின்சார சட்ட திருத்த மசோதா 2020 - மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று விளக்கம்
எரிசக்தித்துறை அமைச்சகம் வகுத்துள்ள வரைவு மின்சார சட்ட திருத்த மசோதா 2020 குறித்து மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று விரிவான விளக்கம் அளிக்க உள்ளார்.
எரிசக்தித்துறை அமைச்சகம் வகுத்துள்ள வரைவு மின்சார சட்ட திருத்த மசோதா 2020 குறித்து மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று விரிவான விளக்கம் அளிக்க உள்ளார். இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதே கோரிக்கையை பல எதிர்க்கட்சி தலைவர்களும் விவசாய அமைப்புகளும் வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.