கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

நெல்லையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் உடலை அடக்க செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

Update: 2020-06-23 03:22 GMT
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டவுன் கோடீஸ்வரன் நகர்பகுதியை முதியவர்  சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்நிலையில்  கருப்பந்துறை பகுதி தாமிரபரணி நதிகரையில் உள்ள மயானத்தில் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு இடம் தேர்வு செய்ய அதிகாரிகள் சென்றனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.பின்னர் சிந்துபூந்துறை பகுதியில் உள்ள மின்மயானத்தில்  முதியவரின் உடல் தகனம் செய்யப்பட்டது
Tags:    

மேலும் செய்திகள்