சென்னையில் கொரோனாவை தடுக்க அதிரடி- வடசென்னையில் பல்வேறு இடங்களை தனிமைப்படுத்த திட்டம்

சென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வடசென்னையில் உள்ள பல்வேறு இடங்களை முழுமையாக தனிமைப்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

Update: 2020-06-07 10:17 GMT
சென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வடசென்னையில் உள்ள பல்வேறு இடங்களை முழுமையாக தனிமைப்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. ராயபுரம், தண்டையார் பேட்டை பகுதியை14 நாட்கள் முழுமையாக தனிமைப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்  ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.இதனிடையே, சென்னை பூக்கடை, யானைக்கவுணி,ஏழு கிணறு, கொத்தவால் சாவடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை இன்று முதல் வரும் 14-ம் தேதி முதல், முழுமையான ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்